ஞாயிறு, 27 மே, 2012

 மாற்று சிந்தனையும் ,மனிதநேயமும்  

               மாற்று சிந்தனை

                என்றவுடன் ஏன் இப்படி ஒரு தலைப்பு  என்று பொதுவாக நினைக்க தோன்றும்.பொதுவாக  ஒருசாலையில் நடந்தோ,அல்லது வாகனத்திலோ செல்லும்போது , வாகன நெருக்கடி ,விபத்து ,சாலை பராமரிப்பு ,போன்ற இடையூறுகள் ஏற்பட்டால் ,நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு வேறு மாற்று பாதையில் செல்வோம்.இதைப்போல நம் வாழ்கையில் இடையூறு ,ஏமாற்றம், தோல்விகளை  சந்தித்தால்,  உடனடியாகப்  பிரச்சனைகளிலிருந்து  விடுபட  ஏதாவது செய்தாகவேண்டும் .அதுதான் மாற்று சிந்தனை .முக்யமாக கவனிக்க வேண்டியது  சாதக  பாதகங்களை ஆராய்ந்து   அறிந்து  நமக்கு சாதகமாகவும், எதிர்த்தரப்புக்கு பாதகம் இல்லாமலும்  ஒரு முடிவு எடுக்கவேண்டும் அதுதான்   சரியான   மாற்று   சிந்தன

                            சிந்தனையை தூண்டுவது மனம் !
நம் முன்னோர்கள் நம்முடைய மனதை மூன்றாகப் பிரித்தார்கள் .அவைகளாவன
                                       1.தெய்வத்தன்மை
                                      
                                        2.மனிதத்தன்மை .

                                        3. மிருகத்தன்மை .
                                
                                       
                      இதை சற்று விரிவாகப்பார்ப்போம்

இந்த மனதுக்கு பல முகங்கள் உள்ளன .அந்த முகங்கள் எப்படி தன்னை காட்டிக்கொள்கிறது என்பதை ப் பாப்போம் . ஒவ்வொரு மனிதனும் சூழ்நிலைகேற்ப தன்னை எப்படி மாற்றிக்  கொள்கிறான் என்பதையும் பார்ப்போம் .
     
இதில் முக்கிய பங்கு வகிப்பது ,
                                          1. முகக்குறிகள்  ,
                                          
                                           2. அங்க அசைவுகள் .
                                          
                                           3. பேசும் வார்த்தைகள் 

ஆகியவைகள் ,முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதைத்தான் நம் முனோர்கள் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றார்கள்
 உதாரணமாக சில வற்றை ப் பார்ப்போம் :---
                                                                                                          மீண்டும் தொடரும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக